Tuesday, February 23, 2010

பிரபஞ்சனின் "மானுடம் வெல்லும்"


தமிழில் எழுதப்பட்ட சாண்டில்யன் வகை 'வரலாற்று' நாவல்கள் பெரும்பாலும் எந்தவிதமான ஆதாரங்களின் அடிப்படையிலும் அமைக்கப்பட்டவை அல்ல.  திரண்ட தோள் கொண்ட வாள் வீரர்கள், கச்சுக்குள் அடங்கா தனங்களைக் கொண்ட இளவரசிகளைக் கட்டிலில் வீழ்த்தும் சாகசங்கள், உறையூர் ஒற்றர்கள், மற்றும்

Wednesday, February 10, 2010

விஷ்ணுபுரம் - மற்றுமொரு விமர்சனம்

விஷ்ணுபுரத்தின் மீதான விமர்சனங்களையும் விவாதங்களையும் தொகுத்தாலே தனியாக ஒரு பெரிய புத்தகம் போடலாம் போலிருக்கிறது.  இதோ, அதன் தாக்கத்தால் உருவான மற்றுமொரு வாசகர் சண்முகம் (ஹ்யூஸ்டன்) அவர்களின் விமர்சனம்...

காலத்தின் பெருவெளியில் உயரத்திலிருந்து, விஷ்ணுபுரம் எனும் ஊரை மையமாக கொண்டு, மூன்று வெவ்வேறு கால கட்டங்களில் வாழ்ந்த மானுடர்களின் ஞானத்தேடலைப் பற்றிய தரிசனமே விஷ்ணுபுரம். பலர் தேட, வெகு சிலரே கண்டடைய, தத்துவங்களைச் சுற்றி மதங்களும், அரசியலும் அதிகாரம் செலுத்த, ஆதி தெய்வ வழிபாட்டை வைதீகம் அபகரிக்க, வைதீகத்தை பௌத்தம் வெற்றி கொள்ள, வைதீகம் மீண்டும் மீள என மதங்கள் ஒன்றை ஒன்று ஆக்கிரமிக்க, ஒரு காலத்தில் நடக்கும் அதர்மங்களும் அபத்தங்களும் பின்னர் ஐதீகங்களாய் மாற - என பன்முகமாய் பிரம்மாண்டமாய் விரிகிறது.

Saturday, February 6, 2010

நாளை மற்றும் ஒரு நாளே!

முப்பது ஆண்டுகளுக்கு முன் வெளியான  நாவல் இது.  எழுத்தாளர் ஜி. நாகராஜனின் எழுத்தின் நேரடித் தன்மை, இன்றைய வாசகனைக்கூடத் திகைக்க வைத்து, பரவசத்துக்குள்ளாக்கும். அவர் எழுத்து, எந்த முலாமும், வார்த்தை ஜாலமும் இல்லாதது.  தமிழில் தனித்தன்மை கொண்ட அவரது எழுத்து, எந்தக் கட்டுப்பாட்டுக்கும் தலை சாயாதது.

கதையின் நாயகன் கந்தன் ஒரு குடிகார ரௌடி. தன் மனைவியையே 'வியாபாரத்துக்கு' அனுப்புவன். ரௌடித் தனம் செய்யும் அவன் வாழ்க்கையில் ஒரு நாளில் நடக்கும் சம்பவங்களைக் கொண்டு, கதாநாயகன் கந்தனைப் பற்றி வாசகர்களாகிய நாம் கொள்ளும் முன்தீர்மானங்களை மறு பரிசீலனைச் செய்யத் தூண்டும் கதை. கதாமாந்தர்கள் மூலம் நம் சமூகக் கட்டுப்பாடுகளின் அடித்தளத்தைப் பற்றிய வினாக்களை இந்தக் கதை எழுப்புகிறது. இவை அனைத்தையும் விட,